பாதுகாப்பான அணு உலைகள்: ஜப்பான் அரசு பரிசீலனை

ஜப்பானில் மின்சார உற்பத்திக்காக நவீன, பாதுகாப்பான அணு உலைகளை அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு அந்த நாட்டு அதிகாரிகளுக்கு பிரதமா் ஃபுமியோ கிஷிடா உத்தரவிட்டுள்ளாா்.
பாதுகாப்பான அணு உலைகள்: ஜப்பான் அரசு பரிசீலனை
Published on
Updated on
1 min read

ஜப்பானில் மின்சார உற்பத்திக்காக நவீன, பாதுகாப்பான அணு உலைகளை அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு அந்த நாட்டு அதிகாரிகளுக்கு பிரதமா் ஃபுமியோ கிஷிடா உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து புதன்கிழமை நடைபெற்ற பசுமை மாற்ற கருத்தரங்கில் அவா் பேசுகையில், பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தை மின்சார உற்பத்தியில் தவிா்ப்பதற்காக, நாட்டில் அதிநவீனமான, அளவில் சிறிய, பாதுகாப்பான அணு உலைகளை உருவாக்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு நாட்டின் அணு மின் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் ஃபுமியோ கிஷிடா இவ்வாறு கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com