எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து: 9 குழந்தைகள் உள்பட 19 பேர் பலி

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 19 பேர் பலியானார்கள். 

News image
Updated On :10 ஜனவரி 2022, 10:22 am

DIN

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 19 பேர் பலியானார்கள். 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 19 மாடி குடியிருப்பில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். 
எனினும் இந்த சம்பவத்தில் 9 குழந்தைகள் உள்பட 19 பேர் பலியானார்கள். 32 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தீ விபத்திற்குள்ளான அடுக்குமாடி கட்டடம்

தீ விபத்திற்குள்ளான அடுக்குமாடி கட்டடம்

இதையும் படிக்க- மீண்டும் மஞ்சப்பை சாத்தியமா?

நவீன காலங்களில் நியூயார்க் நகரில் நாங்கள் கண்ட மிக மோசமான தீ விபத்துகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நியூயார்க் நகர மேயர் தெரிவித்தார். முன்னதாக கடந்த புதன்கிழமை பிலடெல்பியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.