பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
கரோனா தொற்று பேரிடர் காலத்தில் பிரிட்டனில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், பிரதமர் போரிஸ் ஜான்சனின் அறிவிப்புகளும் மக்களை மிகுந்த இன்னல்களுக்குள்ளாக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. தடுப்பூசி செலுத்துதல், முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா கட்டுப்பாடுகளில் போரிஸ் ஜான்சன் காட்டிய அலட்சியப் போக்குக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். கரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் கூட விதிக்கப்பட்டது.
இதையும் படிக்க | நைஜீரிய சிறையிலிருந்து 600 கைதிகள் தப்பியோட்டம்
இது மட்டுமல்லாமல் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான போரிஸ் ஜான்சனின் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பின்சருக்கு துணை தலைமை கொறடா பதவி வழங்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார். இந்த சம்பவங்களால் தொடர் குற்றச்சாட்டுக்கு போரிஸ் ஜான்சன் அரசு உள்ளான நிலையில் அவருக்கு நெருக்கடி முற்றியது.
இதையும் படிக்க | ரிஷி சுனக், பிரிட்டன் நிதியமைச்சர்: சர்ச்சை முதல் ராஜிநாமா வரை...
இதன்காரணமாக அவரது அமைச்சரவையில் இருந்த நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சஜித் ஜாவத் உள்ளிட்டோர் போரிஸ் ஜான்சனைக் கண்டித்து தனது பதவியை ராஜிநாமா செய்தனர். மேலும் அவரைத் தொடர்ந்து பல்வேறு அமைச்சர்களும் போரிஸ் ஜான்சனுக்கு எதிராகத் திரும்பினர்.
இதையும் படிக்க | புதிய வகை கரோனா கண்டுபிடிப்பு: உலக சுகாதார நிறுவனம்
இந்நிலையில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். மேலும் பிரிட்டன் பிரதமர் பதவியையும் அவர் ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
தொடர்ந்து பிரிட்டனில் நிலவி வந்த அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் வியாழக்கிழமை அறிவித்தார்.
ஏற்கெனவே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.