ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜிநாமா

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

News image

போரிஸ் ஜான்சன்

Updated On :7 ஜூலை 2022, 12:26 pm

DIN

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

கரோனா தொற்று பேரிடர் காலத்தில் பிரிட்டனில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், பிரதமர் போரிஸ் ஜான்சனின் அறிவிப்புகளும் மக்களை மிகுந்த இன்னல்களுக்குள்ளாக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. தடுப்பூசி செலுத்துதல், முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா கட்டுப்பாடுகளில் போரிஸ் ஜான்சன் காட்டிய அலட்சியப் போக்குக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். கரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் கூட விதிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான போரிஸ் ஜான்சனின் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பின்சருக்கு துணை தலைமை கொறடா பதவி வழங்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார். இந்த சம்பவங்களால் தொடர் குற்றச்சாட்டுக்கு போரிஸ் ஜான்சன் அரசு உள்ளான நிலையில் அவருக்கு நெருக்கடி முற்றியது.

இதன்காரணமாக அவரது அமைச்சரவையில் இருந்த நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சஜித் ஜாவத் உள்ளிட்டோர் போரிஸ் ஜான்சனைக் கண்டித்து தனது பதவியை ராஜிநாமா செய்தனர். மேலும் அவரைத் தொடர்ந்து பல்வேறு அமைச்சர்களும் போரிஸ் ஜான்சனுக்கு எதிராகத் திரும்பினர். 

இந்நிலையில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். மேலும் பிரிட்டன் பிரதமர் பதவியையும் அவர் ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து பிரிட்டனில் நிலவி வந்த அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் வியாழக்கிழமை அறிவித்தார்.

ஏற்கெனவே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.