பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று இம்ரான் கான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், பாகிஸ்தான் அடிமையாக இருக்கப்போகிறதா? இல்லையா என்பதை வாக்கெடுப்பு முடிவு செய்யும் என்று கூறினார்.
மேலும், எந்த முடிவாக இருந்தாலும், முன்பை விட இன்னும் வலிமையாக திரும்பி வருவேன் என்றும், பாகிஸ்தான் அரசியல் களத்தில் வெளிநாட்டு சக்திகள் மையம்கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளத் தயார். அரசியல் ஆட்டத்தின் கடைசி பந்து வரை களத்தில் நின்று விளையாட தயாராகவுள்ளேன் என்று குறிப்பிட்டார்.