திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமா ஆஸ்திரேலியா பிரதமர் ஆன்டனி ஆல்பனேசிக்கு வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.
"ஆஸ்திரேலியாவுக்கு என்னுடைய முதல் பயணம் 1982இல் தொடங்கியது. உங்களுடைய அழகான நாட்டிற்கு அடிக்கடி வருவது எனக்கு பெருமையாக இருக்கும். குறிப்பாக நாட்டின் கல்வி நிறுவனங்களின் அழைப்பும் அமைதியினை முன்னெடுக்கும் அதன் நோக்கமும் பாராட்டுக்குரியது".
"இந்நாட்டு மக்களின் தாராளமயமான எண்ணங்கள் என்னை பெரிதும் ஊக்கப்படுத்தியுள்ளது. வன்முறையை கடைப்பிடிக்காமல் அமைதியை நிலைநாட்டும் மக்களின் கோட்பாடு தனிமனித ஒருவருக்கு மிகுந்த அமைதியை வழங்கும். இதனால் பொதுவாகவே இந்நாட்டின் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து சுமூகமான சூழ்நிலையை உருவாக்க வாழ்த்து” என அக்கடிதத்தில் கூறியிருந்தார்.