ஈரானில் ஹிஜாப் அணியாமல் சமூக வலைதளங்களில் விடியோ பதிவிட்ட நடிகைகள் ஹெங்கமே காசியானி, காடாயூன் ரியாகி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஹிஜாப் அணியாமல் விடியோ பதிவிட்டதால் அந்நாட்டு காவல் துறை இரு நடிகைகளையும் கைது செய்துள்ளது.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஹெங்கமே காசியானி, இந்தத் தருணத்தில் இருந்து எனக்கு எது நேரும் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், நான் என் கடைசி மூச்சு வரைக்கும் ஈரான் மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன் எனப் பதிவிட்டுள்ளார்.
அந்த விடியோவில் மக்கள் நிறைந்த சாலையில் ஹிஜாப் அணியாமல், கேமராவைப் பார்த்தவாறு திரும்பி தன்னுடைய கூந்தலை அள்ளி முடிகிறார். இந்த விடியோவுக்கு ஈரான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.