பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

புயலில் தத்தளிக்கும் பிலிப்பின்ஸ்: 50 பேர் பலி, பலர் மாயம்

திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பிலிப்பின்ஸ் நாட்டில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :29 அக்டோபர் 2022, 12:56 pm

திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பிலிப்பின்ஸ் நாட்டில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திடீர் வெள்ளப் பெருக்கினால் தெற்கு பிலிப்பின்ஸ் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் காணாமல் போகியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பின்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிலிப்பின்ஸில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பெருக்கினால் குறைந்தது 42 பேர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மேலுல், 8 பேர் நால்கே புயலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பேரிடர் மீட்புக் குழுவினர் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கடுமையான வெள்ளப்பெருக்கினால் மரங்கள் பல வேரோடு அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் பலவும் நிலச்சரிவில் புதைந்தன என்றனர்.

பிலிப்பின்ஸில் உள்ள தீவுகள் ஆண்டுதோறும் 20 புயல்களை எதிர்கொண்டு வருகிறது. பிலிப்பின்ஸ் பசுபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது. இந்த பசுபிக் நெருப்பு வளையத்தில் அதிக அளவில் எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களை சந்திப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.