திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பிலிப்பின்ஸ் நாட்டில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் வெள்ளப் பெருக்கினால் தெற்கு பிலிப்பின்ஸ் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் காணாமல் போகியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: மிக நீளமான பயணிகள் ரயில் என்ற சாதனை படைக்கத் துடிக்கும் நாடு
பிலிப்பின்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிலிப்பின்ஸில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பெருக்கினால் குறைந்தது 42 பேர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மேலுல், 8 பேர் நால்கே புயலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பேரிடர் மீட்புக் குழுவினர் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கடுமையான வெள்ளப்பெருக்கினால் மரங்கள் பல வேரோடு அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் பலவும் நிலச்சரிவில் புதைந்தன என்றனர்.
பிலிப்பின்ஸில் உள்ள தீவுகள் ஆண்டுதோறும் 20 புயல்களை எதிர்கொண்டு வருகிறது. பிலிப்பின்ஸ் பசுபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது. இந்த பசுபிக் நெருப்பு வளையத்தில் அதிக அளவில் எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேருந்துகள் மோதல்: 10 போ் காயம்

1 தபால் வாக்கை சேகரிக்க மலைப்பாதையில் முக்கால் கி.மீ. நடந்துசென்ற தோ்தல் அலுவலா்கள்

பண மோசடி: போலீஸாா் விசாரணை

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


