சீனாவில் 42 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

சீனாவில் 42 மாடி கட்டடத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தால் பரபரப்பு நிலவுகிறது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

சீனாவில் 42 மாடி கட்டடத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தால் பரபரப்பு நிலவுகிறது. 

சீனாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரில் 42 மாடி கட்டடம் உள்ளது. 715 அடி உயரமுள்ள இந்த கட்டடம் 2000ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கட்டடத்தில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 

கீழ்த்தளத்தில் இருந்து மேல்த்தளம் வரை தீ பரவி மளமளவென எரிவதால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமானது. தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு 280 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். 

எனினும், இத்தீ விபத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. சீனாவில் 42 மாடி கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com