நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சீனாவில் 42 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

சீனாவில் 42 மாடி கட்டடத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தால் பரபரப்பு நிலவுகிறது. 

News image

கோப்புப் படம்

Updated On :16 செப்டம்பர் 2022, 11:05 am

DIN

சீனாவில் 42 மாடி கட்டடத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தால் பரபரப்பு நிலவுகிறது. 

சீனாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரில் 42 மாடி கட்டடம் உள்ளது. 715 அடி உயரமுள்ள இந்த கட்டடம் 2000ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கட்டடத்தில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 

கீழ்த்தளத்தில் இருந்து மேல்த்தளம் வரை தீ பரவி மளமளவென எரிவதால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமானது. தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு 280 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். 

எனினும், இத்தீ விபத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. சீனாவில் 42 மாடி கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.