ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாகிஸ்தானில் ரயில் தடம்புரண்டு விபத்து: 20 பேர் பலி!

பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதில் 20 பேர் பலியானார்கள்.  

News image
Updated On :6 ஆகஸ்ட் 2023, 11:26 am

DIN

பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதில் 20 பேர் பலியானார்கள். 

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் சர்ஹாரி ரயில் நிலையம் அருகே திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த சம்பத்தில் 20 பேர் பலியானார்கள். 80க்கும் மேடற்பட்டோர்கள் படுகாயமடைந்தனர். 

சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினரும், காவல்துறையினரும் விரைந்துள்ளனர்.

விபத்து ஏற்பட்ட தடத்தில் ரயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் எண்ணிக்கை உறுதியாக தெரிவரவில்லை என பாகிஸ்தான் ரயில்வேயின் சுக்கூர் பிரிவு வர்த்தக அதிகாரி மொஹ்சின் சியால் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, நான் விபத்து நடந்த இடத்திற்குச் செல்கிறேன். சிலர் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டதாகப் புகாரளிக்கின்றனர், சிலர் எட்டு தடம் புரண்டதாகக் கூறுகிறார்கள், சிலர் 10 தடம் புரண்டதாகக் கூறுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.