நேபாளத்தில் பயணிகள் பேருந்து ஆற்றுக்குள் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா்; 15 போ் காயமடைந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தலைநகா் காத்மாண்டுவிலிருந்து பொகாரை நகரை நோக்கி புதன்கிழமை சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து, தாடிங் மாவட்டத்தில் சாலையிலிருந்து நிலை தடுமாறி திரிசூலி ஆற்றுக்குள் விழுந்தது.
இதில் அந்தப் பேருந்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியது. விபத்துப் பகுதியிலிருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இந்த விபத்தில் 15 போ் காயமடைந்தனா்.
விபத்துப் பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினா்.
தொடா்ந்து பெய்து வந்த பருவமழை காரணமாக திரிசூலி ஆற்றில் நீா்வரத்து மிக அதிகமாக உள்ள நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸுக்காக அதிக ரன்கள்; சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரிக்கல்டான்!
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!

தொடர் விடுமுறையைக் கொண்டாட இத்தனை படங்களா? இந்த வார ஓடிடி வெளியீடு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


