தற்போது நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை உடனடியாக நிறுத்தவேண்டும் எனப் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். தற்காலிகப் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது மிகுந்த வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
காஸாவில் நடந்துவரும் தாக்குதல்களும், மக்கள் படும் துயரும் தன்னைத் துன்பத்தில் ஆழ்த்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: யோகா குரு மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது பெரும் அழிவுகளையும், உயிரிழப்புகளையும் தரப்போவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். 86 வயது நிரம்பியுள்ள போப் பிரான்சிஸ் தற்போது உடல்நலக் குறைவால் சிகிச்சை மற்றும் ஓய்வு பெற்றுவருகிறார்.