போரை உடனே நிறுத்த வேண்டும்!: போப் ஆண்டவர்

போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது மிகுந்த வருத்தமளிப்பதாகவும், போரை மீண்டும் நிறுத்த வேண்டும் எனவும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளர். 
போப் பிரான்சிஸ் | AP
போப் பிரான்சிஸ் | AP

தற்போது நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை உடனடியாக நிறுத்தவேண்டும் எனப் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். தற்காலிகப் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது மிகுந்த வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

காஸாவில் நடந்துவரும் தாக்குதல்களும், மக்கள் படும் துயரும் தன்னைத் துன்பத்தில் ஆழ்த்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது பெரும் அழிவுகளையும், உயிரிழப்புகளையும் தரப்போவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். 86 வயது நிரம்பியுள்ள போப் பிரான்சிஸ் தற்போது உடல்நலக் குறைவால் சிகிச்சை மற்றும் ஓய்வு பெற்றுவருகிறார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com