வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பிணைக் கைதிகள் உயிரோடு நாடு திரும்ப மாட்டார்கள்: ஹமாஸ் எச்சரிக்கை!

காஸா மீது  இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிணைக் கைதிகள் உயிருடன் நாடு திரும்ப மாட்டார்கள் என ஹமாஸ் அமைப்பினர் எச்சரித்துள்ளனர். 

News image
அழிக்கப்பட்ட தங்கள் வீடுகளில் காஸா மக்கள் | AP
Updated On :11 டிசம்பர் 2023, 6:22 am

DIN

இஸ்ரேல், காஸா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி 17,000-த்திற்கும் அதிகமான மக்களைக் கொன்றுவரும் நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிணைக் கைதிகள் உயிருடன் நாடு திரும்ப மாட்டார்கள் என ஹமாஸ் அமைப்பினர் எச்சரித்துள்ளனர். 

'ஹமாஸ் அமைப்பு அழிந்து வருகிறது, தீவிரவாதிகள் சரணடைந்து வருகிறார்கள்' என இஸ்ரேல் படைத் தலைவர் தெரிவித்துள்ள நிலையில் ஹமாஸ் அமைப்பிடமிருந்து இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. 

கடந்த அக்டோபர் 7-ல் ஹமாஸ், இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர், 240 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். பிணைக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனில், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். 

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய இந்த வெற்றிகரமான தாக்குதல் சர்வதேச அளவில் இஸ்ரேலின் மதிப்பை குறைக்கும் விதமாக அமைந்தது. இதனால் ஏற்பட்ட போர் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. 17,000-த்திற்கும் அதிகமான மக்களைக் கொலை செய்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை அழிக்காமல் போரை நிறுத்தப்போவதில்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளது. 

7 நாள்கள் நடைபெற்ற தற்காலிக போர் நிறுத்தத்தில், 80 இஸ்ரேல் பிணைக் கைதிகளுக்கு இணையாக 240 பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

போரை உடனடியாக நிறுத்துவது தொடர்பான ஐநாவின் தீர்மானத்தை அமெரிக்கா ஏற்க மறுத்துள்ள நிலையில், போரை நிறுத்தும் முயற்சியைக் கைவிடப் போவதில்லை என ஐநாவின் பொதுச் செயலளார் அன்டானியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.