திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இஸ்ரேலின் புதிய ஆயுதம்!

காஸா மக்களின் பட்டினியை இஸ்ரேல் போர் ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்வதாக அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 

News image
காஸாவின் தெற்குப் பகுதியில் கூடாரம் அமைத்துத் தங்கியுள்ள மக்கள்.
Updated On :18 டிசம்பர் 2023, 10:32 am

DIN

காஸா மக்களை பட்டினியால் அழிக்க இஸ்ரேல் முயற்சி செய்வதாக அமெரிக்க மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch)  குற்றம் சாட்டியுள்ளது. 

காஸாவிற்குள் உணவுப் பொருள்களை அனுமதிக்காத இஸ்ரேல், காஸா மக்களைப் பட்டினியால் கொல்ல முயற்சிக்கிறது, இது ஒரு போர் குற்றமாகும் எனத் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. 

தண்ணீர், உணவு, எரிபொருள், மருந்துபொருள்கள் என எந்த மனிதநேய உதவிகளும் காஸாவிற்குள் போதுமான அளவு அனுமதிக்கப்படவில்லை. விளைநிலங்கள் போன்ற மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இஸ்ரேல் ராணுவம் அழித்துவருகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நான்காவது ஜெனீவா ஒப்பந்தத்தின்படி அங்கிருக்கும் மக்கள் அனைவருக்கும் உணவு, தண்ணீர் மற்றும் உதவிகளை வழங்க வேண்டியது காஸாவை ஆக்கிரமித்திற்கும் இஸ்ரேலின் பொறுப்பு என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

மக்களின் பட்டினியை மனதில் கொண்டு இஸ்ரேலைப் போரை நிறுத்துமாறு அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது. அதற்கு பதிலளித்த இஸ்ரேல் 'மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, யூத எதிர்ப்பு அமைப்பு' எனக் கூறி போர் நிறுத்தத்திற்கு தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.