ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடந்த 25 ஆண்டுகளில் உலகம் சந்தித்த மிக மோசமான நிலநடுக்கங்கள்

துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை நேரிட்ட மிகப் பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 8 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

News image
Updated On :8 பிப்ரவரி 2023, 12:16 pm

DIN



துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை நேரிட்ட மிகப் பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 8 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

பல இடங்களில் இன்னமும் மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மிகக் குளிர் மற்றும் பனியும் மீட்புப் பணியை சவாலாக்கியிருக்கிறது.

கடந்த 25 ஆண்டுகளில் உலகம் சந்தித்த மிக மோசமான நிலநடுக்கங்கள் என்றால்...
2022 ஜூன் 22ல் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தில் 1,100 பேர் மரணமடைந்தனர். அப்போது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியிருந்தது.

2021, ஆகஸ்ட்  14ல்.. ஹைதி பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தில் 2,200 பேர் பலியாகினர்.

2018, செப்டம்பர் 28ல் இந்தோனேசியாவில் நேரிட்ட நிலநடுக்கம் 7.5 ஆகப் பதிவாகியிருந்தது. 4,300 பேர் பலியாகினர்.

2015, ஏப்ரல் 25ல் நேபாளத்தில் 7.8 ஆகப் பதிவான நிலநடுக்கத்தில் சிக்கி 8,800 பேர் பலியாகினர்.

2011, மார்ச் 11ல் ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் 20 ஆயிரம் பேர் இன்னுயிரை இழந்தனர்.

2010, ஜனவரி 12ல், ஹைதியில் நேரிட்ட மிகப் பயங்கர நிலநடுக்கத்தில் ஒரு லட்சம் பேர் இறந்தனர்.
2008ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்ட 87,500 பேரை பலி வாங்கியது.
2006, மே 27ஆம் தேதி இந்தோனேசியாவின் ஜாவாவை தாக்கிய நிலநடுக்கத்தில் 5,700 பேர் மரணமடைந்தனர்.

2005ஆம் ஆண்டு அக்டோபர் 8ல் பாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கம் 80 ஆயிரம் பேரை பலிவாங்கியது

2005ஆம் ஆண்டு மார்ச் 28ல் சுமத்ரா தீவில் உண்டான நிலநடுக்கத்தில் 1,300 பேர் கொல்லப்பட்டனர்.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து உண்டான ஆழிப்பேரலையும் 2,30,000 பேரின் மரணத்துக்குக் காரணமாகின. சுமார் 12க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்தன.

2003ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

2003ஆம் ஆண்டில் மே 21ஆம் தேதி அல்ஜீரியாவில் 6.8 அளவில் பதிவான நிலநடுக்கத்தில் 2,200 பேர் பலியாகினர்.

2001ஆம் ஆண்டு ஜனவரி 26ல் குஜராத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் 20,000 பேர் மரணத்துக்குக் காரணமாக இருந்தது.

1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ல் துருக்கியில் நேரிட்ட நிலநடுக்கத்தில் 18,000 பேர் பலியாகினர்.

1998ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி 6.6 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஆஃப்கானிஸ்தானில் 4,000 பேர் பலியாகக் காரணமாக இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.