திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

30 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஆர்மீனிய எல்லைப் பகுதி!

தென் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 30 ஆண்டுகளில் முதல் முறையாக துருக்கிக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதி திறக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:29 am

DIN

தென் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 30 ஆண்டுகளில் முதல் முறையாக துருக்கிக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதி திறக்கப்பட்டுள்ளது.

ஆர்மீனியாவுக்கான துருக்கியின் சிறப்புத் தூதர் செர்டார் கிலிக், இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லைப்பகுதியான துருக்கியப் பகுதியில் உள்ள அலிகன் சோதனைச் சாவடி வழியாக லாரிகள் செல்லும் புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார்.

"துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள எங்கள் மக்களின் துன்பங்களைப் போக்க ஆர்மீனியா மக்கள் அனுப்பிய ஏராளமான உதவியை நான் எப்போதும் நினைவில் கொள்கிறேன்" என்று கிலிக் கூறினார். மேலும் ஆர்மேனிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

1988 இல் நிலநடுக்க்கத்தால் பாதிக்கப்பட்ட ஆர்மீனியாவிற்கு துருக்கிய செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து உதவிகளை அனுப்ப கடைசியாக இந்த எல்லைப் பகுதி பயன்படுத்தப்பட்டது.

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து பல பின்னதிா்வுகள் ஏற்பட்டன. அவற்றில் 9 மணி நேரத்துக்கு ஏற்பட்ட ஒரு பின்னதிா்வு வழக்கத்துக்கு மாறாக மிக சக்திவாய்ந்ததாக இருந்தது. ரிக்டா் அளவுகோலில் அந்த அதிா்வு 7.5 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாகக் குலுங்கின. துருக்கியின் நவீன கால வரலாற்றில், அந்த நாடு சந்தித்துள்ள மிக மோசமான நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. இதில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.