
ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜாவிக் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதில் 7 நிலநடுக்கங்கள் லேசான நிலநடுக்கமாக கருதப்பட்டு, ரிக்டர் அளவில் 4-ஆக பதிவானது. நில அதிர்வு நடவடிக்கையின் விளைவாக விமான எச்சரிக்கை பச்சை நிறத்திலிருந்து ஆரஞ்சு ஆக மாற்றப்பட்டது.
எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்பதற்கான அறிகுறி இதுவென்று ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் ஐஸ்லாந்தின் தென்மேற்கு பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், அங்கு மேலும் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.