குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கிழக்கு சீனாவில் கனமழை: 5 பேர் உயிரிழப்பு; 1500 பேர் வெளியேற்றம்!

கிழக்கு சீனாவில் பெய்து வரும் கனமழையால் அந்தப் பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :23 ஜூலை 2023, 5:42 pm IST

கிழக்கு சீனாவில் பெய்து வரும் கனமழையால் அந்தப் பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளத்தால் 1,500-க்கும் அதிகமானோர் அவர்களது இருப்பிடத்திலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்

வெள்ள பாதிப்பு குறித்து சீனாவின் தேசிய வானொலியிலும், உள்ளூர் செய்தி ஊடகங்களிலும் செய்தி வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக உள்ளூர் செய்தி ஊடகத்தில் கூறியதாவது: கனமழையால் பெரிய அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 1,600-க்கும் அதிகமான வீடுகளில் மின்சார இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. 1,500-க்கும் அதிகமானோர் தங்களது இருப்பிடங்களில் இருந்து பத்திரமான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். வடக்கு சீனாவில் சில பகுதிகளில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. கிழக்கு சீனாவில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.