கிழக்கு சீனாவில் பெய்து வரும் கனமழையால் அந்தப் பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளத்தால் 1,500-க்கும் அதிகமானோர் அவர்களது இருப்பிடத்திலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்
வெள்ள பாதிப்பு குறித்து சீனாவின் தேசிய வானொலியிலும், உள்ளூர் செய்தி ஊடகங்களிலும் செய்தி வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக உள்ளூர் செய்தி ஊடகத்தில் கூறியதாவது: கனமழையால் பெரிய அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 1,600-க்கும் அதிகமான வீடுகளில் மின்சார இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. 1,500-க்கும் அதிகமானோர் தங்களது இருப்பிடங்களில் இருந்து பத்திரமான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். வடக்கு சீனாவில் சில பகுதிகளில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. கிழக்கு சீனாவில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது.