கிழக்கு சீனாவில் பெய்து வரும் கனமழையால் அந்தப் பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளத்தால் 1,500-க்கும் அதிகமானோர் அவர்களது இருப்பிடத்திலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்
வெள்ள பாதிப்பு குறித்து சீனாவின் தேசிய வானொலியிலும், உள்ளூர் செய்தி ஊடகங்களிலும் செய்தி வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக உள்ளூர் செய்தி ஊடகத்தில் கூறியதாவது: கனமழையால் பெரிய அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 1,600-க்கும் அதிகமான வீடுகளில் மின்சார இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. 1,500-க்கும் அதிகமானோர் தங்களது இருப்பிடங்களில் இருந்து பத்திரமான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். வடக்கு சீனாவில் சில பகுதிகளில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. கிழக்கு சீனாவில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு!

மஹிந்திரா & மஹிந்திரா 4வது காலாண்டு லாபம் 48.5% உயர்வு!

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி காலமானார்

அதிக, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களில் வென்ற தவெகவினர்!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


