ஆப்கானிஸ்தானில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர்.


ஆப்கானிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு ஆப்கானிஸ்தானில் சிறியரக பேருந்தில், திருமண விழாவுக்காக உறவினர்கள் சென்றுள்ளனர். சார்-இ-புல் மாகாணத்திற்குட்பட்ட மலைப்பாதைகளில், பேருந்து சென்றுகொண்டிருந்தது.
சய்யாத் மாவட்டத்தை நோக்கிச்சென்ற இந்த பயணத்தில் ஓட்டுநரின் கவனக் குறைவால், பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 12 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் அதிக அளவு விபத்துகள் ஏற்படுகின்றன. மோசமான சாலை வசதிகளும், முறையான ஓட்டுநர்கள் இன்றி நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்குவது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...