பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

துருக்கியின் கோக்சன் மாவட்டத்தின் தென்மேற்கில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :18 மார்ச் 2023, 6:53 am

DIN

துருக்கியின் கோக்சன் மாவட்டத்தின் தென்மேற்கில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

கோக்சன் மாவட்டத்தின் தென்மேற்கே 6 கி.மீ தொலைவிலும், 7 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது. 

முன்னதாக பிப்ரவரி மாதத்தில் சிரியாவை தாக்கிய நிலநடுக்கதின் பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 

இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.