துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

துருக்கியின் கோக்சன் மாவட்டத்தின் தென்மேற்கில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

துருக்கியின் கோக்சன் மாவட்டத்தின் தென்மேற்கில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

கோக்சன் மாவட்டத்தின் தென்மேற்கே 6 கி.மீ தொலைவிலும், 7 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது. 

முன்னதாக பிப்ரவரி மாதத்தில் சிரியாவை தாக்கிய நிலநடுக்கதின் பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 

இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com