எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

குழந்தைக்கான உணவில் சிகரெட் துண்டு! துரித உணவகத்திற்கு குவியும் கண்டனங்கள்!

பிரபல துரித உணவகத்தில் குழந்தைக்காக ஆர்டர் செய்த உணவில் சிகரெட் துண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :6 நவம்பர் 2023, 10:00 pm IST


பிரபல துரித உணவகத்தில் குழந்தைக்காக ஆர்டர் செய்த உணவில் சிகரெட் துண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

பிரிட்டனில் செயல்பட்டுவரும் மெக்டொனால்ட்ஸ் என்னும் துரித உணவகத்தில், ஜெம்மா கிர்க் என்ற பெண், தனது ஒன்றரை வயது குழந்தைக்காக உணவு வாங்கியிருந்தார்.

ஹேப்பி மீல்ஸ் என்ற உணவும், பிரெஞ்ச் ஃபிரைஸ் எனும் பொறித்த உணவையும் ஆர்டர் செய்திருந்தார். அதில், பிரெஞ்சு ஃபிரைஸ் நிறத்தில் சிகரெட் துண்டின் அடிப்பாகம் இருந்துள்ளது.  மேலும், சிகரெட் துகள்களும் இருந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் உணவகத்திற்கு தொலைபேசி மூலம் அழைத்து புகார் தெரிவித்துள்ளார். ஆனால், நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் அதற்கு பொறுப்பேற்று பேசவில்லை என்றும் அவமதிக்கும் வகையில் தொடர்பை துண்டித்துவிட்டதாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.