சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மனிதநேய அடிப்படையிலான தற்காலிக போர் நிறுத்தத்தை இந்தியா ஆதரிக்கிறது!

இஸ்ரேல்- ஹமாஸ் போர் விவகாரம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டைப் பற்றி ஐநாவின் இந்திய தூதர் பேசியுள்ளார்.

News image
ருசிரா கம்போஜ் (கோப்புப் படம்)
Updated On :21 நவம்பர் 2023, 7:20 am

DIN

மனிதநேய அடிப்படையிலான தற்காலிக போர் நிறுத்த முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என ஐநாவின் இந்திய தூதர் ருசிரா கம்போஜ் தெரிவித்துள்ளார்

47-வது நாளாக இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடர்ந்து வருகிறது. ஐநா பொது அவையின் கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பில் ஐநாவிற்கான நிரந்த இந்திய தூதர் ருசிரா கம்போஜ் பேசும்போது, இந்தியாவின் நிலைப்பாடு பற்றி பேசியுள்ளார். 

சர்வதேச கூட்டமைப்புகளால் மேற்கொள்ளப்படும் போர் வீரியத்தைத் தணிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா வரவேற்பதாகவும் உடனடி வாழ்வாதார தேவைகள் பாலஸ்தீன மக்களுக்கு சென்று சேர்வதை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

“பயங்கரவாதம் எந்தவிதத்தில் இருந்தாலும் அதனை உறுதியாக எதிர்க்கிறோம். சர்வதேச சட்டத்தைக் கடைபிடிப்பதையும் வன்முறைக்கு எதிராகவும் நிற்கிறோம். போர் விரிவடைவதைத் தடுப்பதும், வாழ்வாதார பொருள்கள் கிடைக்கச் செய்வதும் பிணைக்கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்படவும் வேண்டும். அமைதியும் நிலைத்தன்மையும் உருவாக அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும்” எனப் பேசியுள்ளார் ருசிரா கம்போஜ்.

இதையும் படிக்க: தற்காலிக போர் நிறுத்தம்?

முன்னதாக, இந்தியா 70 டன்கள் அளவுக்கு வாழ்வாதாரப் பொருள்களை அனுப்பியது. அவற்றில் 17 டன்கள் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாழ்வாதார பொருள்கள் இந்தியா சார்பில் தொடர்ந்து அனுப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.