வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

பாகிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 9 பேர் பலி

பாகிஸ்தானில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் இரு ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

News image

கோப்புப்படம்

Updated On :23 நவம்பர் 2023, 4:10 pm IST

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள்
அதிகளவில் நடைபெற்று வருகின்றன. 

பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்(டிடிபி) மற்றும் பிற பயங்கரவாத இயக்கங்கள் ஆகியவை பயங்கரவாத தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை (நவ. 22) பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் வடமேற்கு பாகிஸ்தானின் வடக்கு வஸிரிஸ்தான், தெற்கு வஸிரிஸ்தான் மற்றும் பஜௌர் ஆகிய மாவட்டங்களில், நான்கு வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் இரு ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர்.

வடக்கு வஸிரிஸ்தான் மாவட்டத்தில் ராஸ்மக் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவத்தில், தெற்கு வஸிரிஸ்தான் மாவட்டத்தின் வானா பகுதியில் உள்ள ஒரு கடையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 4  பேர் கொல்லப்பட்டனர்.

அதேபோல, பஜௌர் மாவட்டத்தில் நடைபெற்ற இருவேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில்,  உள்ளூர் ஜாமியாத்-உலெமா-இ-இஸ்லாம்(ஜேயுஐ-எப்) தலைவரின் தந்தை உள்பட  மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் 3 பேர் படுகாயமடைந்தனர். 

இந்தநிலையில், பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில், பயங்கரவாதிகளை  வேரறுக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக இறங்கியுள்ளதாக  ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.