மெக்ஸிகோவில் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து 7 பேர் பலி! 

மெக்ஸிகோவின் தமௌலிபாஸ் மாநிலத்தில் உள்ள சாண்டா குரூஸ் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர்.
மெக்ஸிகோவில் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து 7 பேர் பலி! 

மெக்ஸிகோவின் தமௌலிபாஸ் மாநிலத்தில் உள்ள சாண்டா குரூஸ் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தேவாலயம் இடிந்து விழுந்த நேரத்தில் 100 பேர் உள்ளே இருந்ததாகக் கூறப்படுகிறது. இடிபாடுகளில் பல குழந்தைகள் இருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

உள்ளே சிக்கியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேற்கூரையில் திடீரென விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்ததால் அப்பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீஸார் மற்றும் மீட்புப் படையினர் கூடியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com