மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிரீஸில் வெள்ளம்: 800-க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்பு!

கிரீஸில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 800-க்கும் அதிகமானோர் கடந்த இரண்டு நாள்களில் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 செப்டம்பர் 2023, 12:42 pm

DIN

கிரீஸில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 800-க்கும் அதிகமானோர் கடந்த இரண்டு நாள்களில் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரீஸில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தினால் சாலைகள் சேதமடைந்துள்ளன. கார்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன. கிரீஸ் மட்டுமல்லாது அண்டை நாடுகளான பல்கேரியா, துருக்கி போன்ற நாடுகளும் கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று நாடுகளிலும் கனமழை வெள்ளத்துக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

வெள்ள பாதிப்புகள் தொடர்பாக தீயணைப்புத் துறை சார்பில் கூறியதாவது: மக்களை நீரில் குதித்து விரைந்து காப்பாற்றுவதற்காக பயிற்சி பெற்ற வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ராணுவமும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சாலைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டபோதிலும், மீட்புப் படை வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வெள்ள நீர் 2 மீட்டர் உயரம் வரை இருக்கிறது. மீட்புப் பணியில் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் படகினை இயக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. தொடர்ச்சியாக மின்னல் இருப்பதால் ஹெலிகாப்டரை இயக்குவதும் சிக்கலாக உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.