அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணியாவிட்டால் 10 ஆண்டுகள் சிறை!

ஈரானில் பெண்கள் ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் மசோதா அந்த நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :21 செப்டம்பர் 2023, 7:53 am

DIN

ஈரானில் பெண்கள் ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் மசோதா அந்த நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஈரானில் பெண்கள் வெளியே செல்லும்போது ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயமாக உள்ளது. எனினும் அங்கு ஹிஜாப்புக்கு எதிராக குரல்கள் வலுத்து வருகின்றன. 

கடந்த ஆண்டு ஹிஜாப் அணியாத இளம் பெண் ஒருவர் காணாமல் போன நிலையில் பின்னர் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்தன. 

இந்நிலையில் ஈரான் அரசு, பெண்களின் ஆடைக் கட்டுப்பாட்டுக்காக ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. 

அதன்படி, ஈரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணியாமல் சென்றால், ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் 5 முதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும், அத்துடன் இந்திய மதிப்பில் ரூ. 3.5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.