ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

பிளாஸ்டிக் பலூனில் சமையல் எரிவாயுவை எடுத்து செல்லும் பாகிஸ்தான் மக்கள்!

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவில் உள்ள மக்கள் சமையல் எரிவாயுவை பிளாஸ்டிக் பலூன்களில் எடுத்து செல்லும் காட்சி பிரபலமாகி உள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2023, 2:27 pm IST

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவில் உள்ள மக்கள் சமையல் எரிவாயுவை பிளாஸ்டிக் பலூன்களில் எடுத்து செல்லும் காட்சி பிரபலமாகி உள்ளது.

பாகிஸ்தானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை உள்ளதால் சமையல் எரிவாயுயை பிளாஸ்டிக் பலூனில் சேகரித்து செல்கின்றனர்.

எரிவாயு விற்பனையாளர்கள் ஒரு கம்ப்ரசரைப் பயன்படுத்தி சமையல் எரிவாயுவை ஒரு பிளாஸ்டிக் பையில் நிரப்பி, வால்வு மூலம் மூடி. பின்னர் மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.

பின்னர் மக்கள் ஒரு சிறிய மின்சார உறிஞ்சும் பம்ப் உதவியுடன் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் பைகளில் மூன்று முதல் நான்கு கிலோ எரிவாயுவை நிரப்ப தோராயமாக ஒரு மணி நேரம் ஆகும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, கைபர் பக்துன்க்வாவின் கரக் பகுதியில் உள்ள மக்களுக்கு 2007 முதல் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படவில்லை, அதே நேரத்தில் ஹாங்கு நகரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக  சமையல் எரிவாயு வழங்கப்டாமல் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.