டிசம்பரில் இருந்து செயல்படாத கணக்குகளை நீக்கும் பணியை கூகுள் தொடங்கவுள்ளது.
கூகுள் நிறுவனம் செயல்படாத கணக்குகளுக்கான கொள்கைகளை புதுப்பித்துள்ளது. இந்த புதிய கொள்கை அனைத்து கூகுள் தயாரிப்புகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாத அல்லது உள்நுழைந்திருக்காத(log in) தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கான கொள்கையை கூகுள் நிறுவனம் மாற்றியுள்ளது.
2 ஆண்டுகளாக எந்தச் செயல்பாடும் இல்லாமல் உள்ள கணக்கு மற்றும் மின்னஞ்சல்கள், கோப்புகள், விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற அனைத்து உள்ளடக்கங்களையும் நீக்கும் பணியை கூகுள் தொடங்கவுள்ளது.
இந்த மாற்றம் தனிப்பட்ட கணக்குளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், வணிகம், கல்வி உள்ளிட்ட நிறுவன கணக்குகளுக்கு பொருந்தாது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கணக்குகளை நீக்கும் முன்பு செயல்படாத மின் அஞ்சல் முகவரிக்கு கூகுளில் இருந்து கணக்குகளை புதுப்பிக்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை மின் அஞ்சலை கூகுள் நிறுவனம் அனுப்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியை கூகுள் நிறுவனம் வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று முதல்வா் ரங்கசாமி பிறந்த நாள் விழா

புதிய மாநகராட்சிகளின் வாா்டு வரையறை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை

மதகில் தேங்கிய குப்பைகள் அகற்றம்! பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு மீண்டும் தண்ணீா் திறப்பு

மதுரை அருகே இரு காா்கள் மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



