இஸ்ரேல் சென்றுள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்தித்து பேசினார். அந்தச் சந்திப்பின்போது பாலஸ்தீனர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்தி பேசியுள்ளார்.
``ஹமாஸின் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களாகப் பாலஸ்தீன மக்கள் உள்ளனர். அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை நாம், தொடர்ந்து அளிப்பது முக்கியமானது” எனத் தெரிவித்துள்ளார் ரிஷி சுனக்.
அதற்கு முன்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர் தானும் இங்கிலாந்து அரசும் இஸ்ரேலிய மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இஸ்ரேல் சென்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.