நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

காஸாவில் மீண்டும் இணைய சேவை: பாலஸ்தீனம்

காஸாவில் மீண்டும் இணையசேவை படிப்படியாக வழங்கப்பட்டு வருவதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. 

Published On :6 பிப்ரவரி 2024, 6:48 pm IST

காஸாவில் மீண்டும் இணையசேவை படிப்படியாக வழங்கப்பட்டு வருவதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. 

பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் மூன்றாவது வாரமாக தொடர்ந்து வருகிறது. காஸா மீது தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. 

தரைவழியாக காஸா எல்லையில் நுழைந்து காஸாவினுள் உள்ள ஹமாஸ் படையினரை அழிக்கவும், காஸா தரப்பரப்புக்கு கீழே பதுங்கு குழிகளுக்குள் தாக்குதல் நடத்தவும் தரை வழித்தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இது போரின் இரண்டாம் கட்டம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே காஸாவில் தடைசெய்யப்பட்டிருந்த இணையசேவை மீண்டும் படிப்படியாக தற்போது வழங்கப்பட்டு வருவதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காஸாவுக்கான இணைய சேவை கடந்த வெள்ளிக்கிழமை முதல் துண்டிக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே தாக்குதலில் துண்டிக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு கேபிள்கள் சரி செய்யப்பட்டதால், இணையசேவை மீண்டும் கிடைப்பதாகவும் படிப்படியாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும் எனவும் பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே காஸா எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இணையத்தை பயன்படுத்த முடிவதாக பாலஸ்தீன செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.