போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கான புதிய திட்ட முன்மொழிவை இஸ்ரேல்- ஹமாஸ் இருதரப்புக்கும் அளித்துள்ளதாக எகிப்து செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
ஆறு மாத காலமாக தொடர்ந்துவரும் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் மத்தியஸ்தம் மேற்கொண்டுவரும் எகிப்து நாட்டின் கெய்ரோவில் இரு தரப்பு பிரதிநிதிகளிடம் இந்த உடன்படிக்கைக்கான முன்மொழிவு அளிக்கப்பட்டதாக எகிப்து தெரிவித்தது.
ஆறு வாரத்துக்கான போர் நிறுத்தம், ஹமாஸ் பிணைக்கைதிகள் 40 பேர் விடுதலை, 700 பாலஸ்தீன கைதிகள் விடுதலை ஆகியவற்றை நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன.
இரு தரப்பினருமிடையே அவர்கள் விடுதலை செய்யவிருக்கும் கைதிகளின் பட்டியலை எகிப்து கேட்டுள்ளதாக தெரிவித்தது.
மேலும், காஸாவில் போரினால் தெற்குப் பகுதி நோக்கி இடம்பெயர செய்யப்பட்ட பாலஸ்தீனர்கள் மீண்டும் வடக்குக் காஸாவுக்கு வருவதற்கான நிபந்தனையும் இந்த முன்மொழிவில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்வதைத் தடுக்க இஸ்ரேல் நிறுவியுள்ள சோதனை தடுப்புகளை நீக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஹமாஸ் இதனை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போர் நிறுத்தம்! அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

இஸ்ரேல்-லெபனான் சண்டை நிறுத்தம்: அமெரிக்க அறிவிப்பை நிராகரித்தது ஹிஸ்புல்லா!

போர் நிறுத்தம்! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!
கச்சா எண்ணெய் விலை 15% சரிவு! டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


