இஸ்ரேலுக்கு அருகாமையில் சிரியாவில் அமைக்கப்பட்ட ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் அமைப்பின் உள்கட்டமைப்புகளை செவ்வாய்க்கிழமை இரவு தகர்த்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
பிராந்தியத்தில் எது நடந்தாலும் அதற்கு சிரியாதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் மேலும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு அவர்களின் தாக்குதல் நிலைகளை சிரியாவில் நிறுவுவதற்கு அனுமதிக்கக் கூடாது எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் கண்காணிப்பு இடங்கள், உள்கட்டமைப்புகள் சிலவற்றின் மீதும் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளது.