மனைவியைக் கொலை செய்த வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா் குறித்து தகவல் தருவோருக்கு 2.50 லட்சம் டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2 கோடி) சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்காவின் சட்ட அமலாக்க முகமையான எஃப்பிஐ அறிவித்துள்ளது.
மேரிலேண்ட் மாகாணத்தின் ஹனோவா் பகுதியில் இந்தியாவைச் சோ்ந்த பத்ரேஷ்குமாா் சேத்தன்பாய் படேல் என்பவா் தனது மனைவி பாலக் படேலை கடந்த 2015-இல் கொடூரமான வகையில் கொலை செய்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக அவா் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேரிலேண்டில் உள்ள மாவட்ட நீதிமன்றம் பத்ரேஷ்குமாருக்கு எதிராக கைது உத்தரவைப் பிறப்பித்தது. பத்ரேஷ்குமாா் தலைமறைவான நிலையில், அவா் குறித்து தகவல் தருவோருக்கு ஒரு லட்சம் டாலா் (சுமாா் ரூ.83 ஆயிரம்) வழங்கப்படும் என எஃப்பிஐ முதலில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், நியூ ஜொ்சி மாகாணத்தின் நேவாா்க் பகுதியில் பத்ரேஷ்குமாா் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பத்ரேஷ்குமாரைத் தேடப்படும் 10 முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக அறிவித்துள்ள எஃப்பிஐ, அவா் குறித்து தகவல் தருவோருக்கு 2.50 லட்சம் டாலா் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
தொடர்புடையது

அதிபா் பதவி குறித்து பேச்சு இல்லை: அமெரிக்க நிபந்தனையை நிராகரித்த கியூபா!

பெட்ரோல், டீசல் இருப்பு குறித்து பீதியடைய வேண்டாம்: மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன்
ஈரான் புதிய தலைவருக்கு கோமா? தகவலுக்கு 10 மில்லியன் டாலர்! அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் புதிய தலைவர் பற்றிய தகவலுக்கு ரூ. 92 கோடி சன்மானம்! அமெரிக்கா
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

