ஆப்கானிஸ்தானில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் கடும் வெள்ளத்தில் சிக்கி 33 பேர் பலியாகினர்.
ஒடிசா வெள்ளம் : 115 பேர் மீட்பு
ஒடிசா வெள்ளம் : 115 பேர் மீட்பு

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில், கடந்த மூன்று நாள்களில் 33 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்துள்ளனர்.

தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஜனன் சாயிக் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட கடும் வெள்ளம், பல்வேறு மாகாணங்களையும் பாதித்துள்ளது.

இந்த வெள்ளத்தில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ள. 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன.

சுமார் 800 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவித்துள்ளார். பல முக்கிய சாலைகளில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com