வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

News image

கோப்புப் படம். புகைப்படம் நன்றி(ஏ.பி).

Updated On :27 ஏப்ரல் 2024, 8:10 pm IST

கம்போடியாவில் உள்ள ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவின் கம்போங் பியூ மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் இன்று பிற்பகல் திடீரென வெடிமருந்து வெடித்தது.

இந்த சம்பவத்தில் 20 வீரர்கள் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.

காயமடைந்த வீரர்கள் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரிவரவில்லை.

இந்த வெடி விபத்து பற்றிய செய்தியை அறிந்ததும் தான் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்ததாக பிரதமர் ஹன் மேனட் முகநூல் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், பலியானவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.