தென் கொரியாவில் வெப்பம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,546 ஆக உயர்ந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சியோலின் தென்கிழக்கில் 64 கி.மீ தொலைவில் உள்ள யோஜூவில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டியது. இது கடந்த 2018-க்குப் பிறகு பதிவான அதிகப்படியான வெப்பம் என்று கூறப்படுகிறது.
வெப்பம் தாக்குதல் தொடர்பான நோய்களுக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,35,880 கோழிகள் உள்பட 2,35,880 கால்நடைகளும் பலியாகியுள்ளன.
இந்த வெப்ப அலையானது அடுத்த 10 நாள்களுக்கு தொடரும் என்றும், பகல் நேரத்தில் சராசரியை விட வெப்பம் கூடுதலாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 30 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த வாரம் கடுமையான வெப்பநிலை நிலவும் என்பதால் மக்கள் பிற்பகல் 2 மணிக்கு மேல் வெளியே வருவதைத் தவிர்க்குமாறும், குளிர்ச்சியுடன் வைத்திருக்குமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோழிகளுக்கு வெப்ப அயற்சி, ரத்தசோகை பாதிப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
காங்கோவில் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா பாதிப்பு; 754 பேர் பலி!

மதுரையில் 108.5 டிகிரி வெயில்

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



