மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வங்கதேசத்தில் இடைக்கால அரசு: தலைமைப் பொறுப்பேற்றார் முகமது யூனுஸ்!

வங்கதேசம்: இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் இன்றிரவு பொறுப்பேற்பு

News image

படம் | பிடிஐ

Updated On :8 ஆகஸ்ட் 2024, 6:48 pm

DIN

வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் இன்றிரவு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

வங்கதேசத்தில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதையடுத்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் போராட்ட அமைப்புகள்,நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் தலைமை ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

டாக்காவில் மாணவர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்களுடன் முகமது யூனுஸ்

டாக்காவில் மாணவர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்களுடன் முகமது யூனுஸ்

பதவியேற்புக்காக துபாயில் இருந்து இன்று பிற்பகல் டாக்கா வந்த முகமது யூனுஸை ராணுவ தலைமைத் தளபதி வாக்கா்-உஸ்-ஸமான், மாணவர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள் வரவேற்றனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பேராசிரியர் முகமது யூனுஸுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாவும், வங்கதேசத்தில் இயல்பு நிலை விரைவில் திரும்புமென நம்புவதாகவும், அங்குள்ள ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமென நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைமைப் பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் முகமது யூனுஸுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாவும், அங்கு அமைதியும் இயல்பு நிலை திரும்புதலே இப்போதையை உடனடி தேவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவிக்கு இணையான ‘தலைமை ஆலோசகர்’ என்ற பொறுப்பை முகமது யூனுஸ் ஏற்றுக்கொண்டுள்ளார். அவரது தலைமையிலான, இடைக்கால அரசுக்கு உதவியாக 16 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசகர்கள் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களான நஹீது இஸ்லாமும், ஆசிப் மகமூத்தும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தில் விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அந்நாட்டை வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.