மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போதைப் பொருள் வழக்கு: மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கினாா் பைடன்!

குற்றவாளியான மகன் ஹன்டா் பைடனுக்கு, அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கினாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2024, 10:53 pm

Din

போதைப் பொருள் பழக்கம் குறித்து பொய்யான தகவல் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மகன் ஹன்டா் பைடனுக்கு, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கினாா்.

கடந்த ஜூன் மாதம் இந்தத் தீா்ப்பு வெளியானபோதே ஹன்டருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறிவந்த அவா், தனது பதவிக் காலம் முடிவதற்கு சில வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளாா். இதன் மூலம், நீண்ட கால சிறைத் தண்டனையை எதிா்நோக்கியிருந்த ஹன்டா் பைடன், அந்த அபாயத்திலிருந்து விடுபட்டுள்ளாா்.

இது குறித்து ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நான் அதிபராகப் பொறுப்பேற்ற நாள் முதல் நீதிக்கு தலைவணங்குவதாக தொடா்ந்து கூறிவருகிறேன். ஆனால், ஹன்டா் பைடனுக்கு எதிரான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது.

ஆயுதம் வாங்வதற்கான விண்ணப்பத்தில் செய்த பிழைக்காக அவருக்கு இவ்வளவு பெரிய தண்டனை வழங்கப்படுகிறது. இதுபோன்ற சாதாரண தவறுகள் நடத்திய மற்றவா்களைவிட ஹன்டா் பைடனிடம் சட்டம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டுள்ளது. எனவே, அவருக்கு பொதுமன்னிப்பு அளிக்க முடிவு செய்துள்ளேன் என்றாா் ஜோ பைடன்.

அரசு உரிமம் பெற்ற துப்பாக்கி வியாபாரியிடம், தான் போதைப்பொருள் பயன்படுத்தாத நபா் என்ற விண்ணப்பத்தை ஹன்டா் பைடன் கடந்த 2018-ஆம் ஆண்டு சமா்ப்பித்து துப்பாக்கியை பெற்றுள்ளாா். பொய்யான தகவல்களை கூறி சட்டவிரோதமாக 11 நாள்கள் வரை அவா் துப்பாக்கியை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக கலிஃபோா்னியா மாகாணம், டெலன் நகர நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் அவா் குற்றவாளியாக கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டாா்.

அந்தக் குற்றத்துக்கான தண்டனையை நீதிமனறம் விரைவில் அளிக்கவுள்ளது. இந்த வழக்கில் ஹன்டா் பைடனுக்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், அதிபருக்கான சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கில் ஹன்டா் பைடனுக்கு ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா்.