அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இந்திய சேனல்களை தடை செய்ய வங்கதேச நீதிமன்றத்தில் மனு!

இந்திய தொலைக்காட்சி சேனல்களை தடை செய்யக்கோரி வங்கதேசத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது பற்றி...

News image
கோப்புப்படம்
Updated On :3 டிசம்பர் 2024, 7:48 am

DIN

டாக்கா: வங்கதேசத்தில் ஒளிப்பரப்பாகும் இந்திய தொலைக்காட்சி சேனல்களை தடை செய்ய வேண்டுமென்று அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞரான இக்லாஸ் உத்தின் புயான் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அந்நாட்டில் செயல்படும் இந்திய தொலைக்காட்சி சேனல்களால் வங்கதேசத்தின் சமுதாயத்திலும் கலாச்சாரத்திலும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் இதனால் அந்நாட்டிற்குள் இந்திய சேனல்களை ஒளிப்பரப்ப தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வங்கதேச உயர் நீதிமன்ற நீதிபதி பாத்திமா நஜீப் மற்றும் நீதிபதி சிக்தர் மஹ்முதுர் ராஜி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வர இருக்கின்றது.

அந்த மனுவில் அங்கு செயல்படும் இந்திய சேனல்களில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் அந்நாட்டின் கலாச்சாரத்திற்கு எதிரானதாக இருப்பதாகவும் இதனால் அந்நாட்டின் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவை வெளியிடும் செய்திகள் வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், இந்தியாவை சார்ந்த பிரபல முன்னணி சேனல்களோடு சேர்த்து அனைத்து இந்திய சேனல்களும் தடை செய்யப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.