டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மக்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும்: சிரியாவின் இடைக்கால பிரதமர் அழைப்பு!

சிரியாவின் உள்நாட்டுப் போரில் கிளா்ச்சியாளா்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

News image
- படம் | AFP
Updated On :11 டிசம்பர் 2024, 2:36 pm

DIN

சிரியாவின் இடைக்கால பிரதமராக முகமது அல்-பஷீர் பொறுப்பேற்றுள்ளார்.

சிரியாவில் நெடுங்காலமாக ஆட்சி அதிகாரத்திலிருந்த அந்நாட்டின் அதிபா் பஷாா் அல்-அஸாதுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் கிளா்ச்சியாளா்கள் வெற்றி பெற்றுள்ளனர். சிரியா தலைநகா் டமாஸ்கஸை கிளா்ச்சிக் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைப்பற்றினா். இதையடுத்து, அதிபா் பஷாா் அல்-அஸாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. சிரியாவில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட சிரியா அதிபா் அல்-அஸாதுக்கு ரஷியா அடைக்கலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பஷாா் அல்-அஸாத் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, சிரியாவின் புதிய பிரதமராக கிளர்ச்சியாளர்களால் முகமது அல்-பஷீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் சிரியாவின் பிரதமராக மார்ச் மாத ஆரம்பம் வரை தொடருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பிரதமர் முகமது அல்-பஷீர் சிரிய மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வெளிநாடுகளில் அகதிகளாக அடைக்கலம் அடைந்துள்ள சிரிய மக்கள் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்புமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டிருந்த பகுதிகளில் அரசு நிர்வாகத்தை தலைமையேற்று நடத்தியவர் முகமது அல்-பஷீர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.