கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

மக்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும்: சிரியாவின் இடைக்கால பிரதமர் அழைப்பு!

சிரியாவின் உள்நாட்டுப் போரில் கிளா்ச்சியாளா்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

News image

படம் | AFP

Updated On :11 டிசம்பர் 2024, 8:06 pm IST

சிரியாவின் இடைக்கால பிரதமராக முகமது அல்-பஷீர் பொறுப்பேற்றுள்ளார்.

சிரியாவில் நெடுங்காலமாக ஆட்சி அதிகாரத்திலிருந்த அந்நாட்டின் அதிபா் பஷாா் அல்-அஸாதுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் கிளா்ச்சியாளா்கள் வெற்றி பெற்றுள்ளனர். சிரியா தலைநகா் டமாஸ்கஸை கிளா்ச்சிக் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைப்பற்றினா். இதையடுத்து, அதிபா் பஷாா் அல்-அஸாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. சிரியாவில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட சிரியா அதிபா் அல்-அஸாதுக்கு ரஷியா அடைக்கலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பஷாா் அல்-அஸாத் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, சிரியாவின் புதிய பிரதமராக கிளர்ச்சியாளர்களால் முகமது அல்-பஷீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் சிரியாவின் பிரதமராக மார்ச் மாத ஆரம்பம் வரை தொடருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பிரதமர் முகமது அல்-பஷீர் சிரிய மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வெளிநாடுகளில் அகதிகளாக அடைக்கலம் அடைந்துள்ள சிரிய மக்கள் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்புமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டிருந்த பகுதிகளில் அரசு நிர்வாகத்தை தலைமையேற்று நடத்தியவர் முகமது அல்-பஷீர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.