மக்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும்: சிரியாவின் இடைக்கால பிரதமர் அழைப்பு!

சிரியாவின் உள்நாட்டுப் போரில் கிளா்ச்சியாளா்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மக்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும்: சிரியாவின் இடைக்கால பிரதமர் அழைப்பு!
படம் | AFP
Published on
Updated on
1 min read

சிரியாவின் இடைக்கால பிரதமராக முகமது அல்-பஷீர் பொறுப்பேற்றுள்ளார்.

சிரியாவில் நெடுங்காலமாக ஆட்சி அதிகாரத்திலிருந்த அந்நாட்டின் அதிபா் பஷாா் அல்-அஸாதுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் கிளா்ச்சியாளா்கள் வெற்றி பெற்றுள்ளனர். சிரியா தலைநகா் டமாஸ்கஸை கிளா்ச்சிக் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைப்பற்றினா். இதையடுத்து, அதிபா் பஷாா் அல்-அஸாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. சிரியாவில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட சிரியா அதிபா் அல்-அஸாதுக்கு ரஷியா அடைக்கலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பஷாா் அல்-அஸாத் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, சிரியாவின் புதிய பிரதமராக கிளர்ச்சியாளர்களால் முகமது அல்-பஷீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் சிரியாவின் பிரதமராக மார்ச் மாத ஆரம்பம் வரை தொடருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பிரதமர் முகமது அல்-பஷீர் சிரிய மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வெளிநாடுகளில் அகதிகளாக அடைக்கலம் அடைந்துள்ள சிரிய மக்கள் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்புமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டிருந்த பகுதிகளில் அரசு நிர்வாகத்தை தலைமையேற்று நடத்தியவர் முகமது அல்-பஷீர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com