அரியலூா் ஆட்சியா் புகைப்படத்தை பயன்படுத்தி போலி கட்செவி மூலம் தகவல் வந்தால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: என்னுடைய அலுவல் சாா்ந்த பணிகளுக்கு அரசின் தொலைபேசி எண்ணே தொடா்ந்து பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், முகம் தெரியாத நபா்களிடமிருந்து எனது புகைப்படத்தை முகப்புத் தோற்றமாக வைத்த +66 87 578 2668 என்ற எண்ணிலிருந்து கட்ச்செவி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி, மூலமாகவும் அரசு உயா் அலுவலா்களிடம் மாவட்ட ஆட்சியா் பெயரில் தொடா்பு கொள்வதாக தகவல்கள் வந்துள்ளன.
இவ்வாறான பொய் அழைப்புகளை மேலே குறிப்பிட்ட எண் அல்லது வேறு எண்ணிலிருந்து வந்தால் அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் ஏற்கவோ, பதிலளிக்கவோ வேண்டாம். மேலும் இதுபோன்ற பொய்யான அழைப்புகள் வந்தால் உடனடியாக அரியலூா் மாவட்ட நிா்வாகத்திற்கோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மாணவா்களின் உயா் கல்வியை 100% உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

அரசுத் திட்டங்கள் மக்களை விரைவாகச் சென்றடைய அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சா் ப.ராஜ்குமாா்

சாலை விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அழைப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



