உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் மீது பிபிசி செய்தி நிறுவனம் புகாரளித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழிநுட்பமான ’ஆப்பிள் இன்டலிஜென்ஸ்’ வசதியை சில நாள்களுக்கு முன்பு பிரிட்டனில் அறிமுகப்படுத்தியது. இதில், பல தளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட செய்திகளை ஏஐ மூலம் அறிவிப்பாகத் (நோட்டிஃபிகேசன்) தயாரித்து வெளியிடும் வசதி உள்ளது.
அதில் பிபிசி தளத்தின் செய்தி எனக் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு ஒன்றில், அமெரிக்காவில் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் ப்ரையன் தாம்ப்ஸனை கொன்ற வழக்கில் கைதான லூகி மேங்கியோன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியிட்டது.
பிபிசி பெயரில் ஆப்பிள் ஏஐ வெளியிட்ட செய்தி அறிவிப்பு
இது பொய்யானத் தகவலாகும். இதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்திடம் இந்தச் செய்தி குறித்து பிபிசி நிறுவனம் புகார் தெரிவித்தது.
இதையும் படிக்க | ஒபன் ஏஐ முறைகேட்டை வெளி உலகிற்கு தெரிவித்த அமெரிக்க-இந்தியர் மரணம்!
இதுதொடர்பாக பிபிசி செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “பிபிசி நிறுவனம் உலகின் மிகவும் நம்பத்தகுந்த செய்தி நிறுவனமாகும். எங்கள் பெயரில் வெளியாகும் எந்தச் செய்தி அல்லது அறிவிப்பை எங்களின் பார்வையாளர்கள் நம்புவார்கள். மேலும், அந்த நம்பகத்தன்மை எங்களுக்கு முக்கியமாகும். இந்த விவகாரம் குறித்து ஆப்பிள் நிறுவனத்திடம் நாங்கள் புகாரளித்துள்ளோம். மேலும், இதனைச் சரிசெய்யவும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிசி நிறுவனம் மட்டுமின்றி நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்தின் செய்தி என்ற பெயரில் வெளியிட்ட அறிவிப்பில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘டெக்’ துணுக்குகள்! ஆப்பிள் விலை உயர்வு முதல் விஐ இலவச ஸ்பாட்டிஃபை வரை..!
டாடா நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்! விற்பனையில் 2 லட்சம் ரகசிய கோப்புகள்! என்ன நடந்தது?

டெக் துணுக்குகள்... ஆப்பிள் சாதனங்களின் விலை உயா்வு?

டெக் துணுக்குகள்...
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



