டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ரஷியாவுக்கு செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!

இந்தியர்களை விசா இல்லாமல் அனுமதிக்கும் ரஷியா...

ரஷியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - AP

Published On :

அடுத்தாண்டு முதல் விசா இல்லாமல் இந்தியர்கள் பயணம் செய்ய ரஷியா அனுமதிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் விசா இல்லாத சுற்றுலா பரிமாற்றங்களை செயல்படுத்துவது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்பந்தம் கொண்டுவருவது பற்றி விவாதித்தனர்.

ஆகஸ்ட் 2023 முதல் இந்தியர்களை இ-விசாக்கள் மூலம் ரஷியா அனுமதித்து வருகின்றது. இந்த இ-விசாக்கள் விண்ணப்பித்து 4 நாள்களுக்குள் வழங்கப்படுகிறது. இந்தியா உள்பட 5 நாடுகளுக்கு இ-விசா மூலம் பயணம் செய்ய ரஷியா அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் இ-விசா மூலம் 9,500 இந்தியர்கள் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ரஷியாவுக்குள் நுழைவதற்கும், தங்குவதற்கும் அந்நாட்டின் தூதரகத்தில் இந்தியர்கள் விசா பெறும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இந்த செயல்முறை மிக நீண்டதாகும்.

பெரும்பாலான இந்தியர்கள் வணிகம் மற்றும் அலுவல் நோக்கத்துக்காக ரஷியாவுக்கு பயணம் செய்கிறார்கள். 2023ஆம் ஆண்டில் மட்டும் 60,000 பேர் பயணித்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 26 சதவிகிதம் அதிகமாகும்.

தற்போது சீனா மற்றும் ஈரான் நாட்டினரை விசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைய ரஷியா அனுமதித்து வருகின்றது. இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளதை தொடர்ந்து, இந்தியாவுக்கும் விரிவுப்படுத்த முன்வந்துள்ளது ரஷியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.