பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள வனுவாடூ தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நிலடுக்கத்தால் 14 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 6 பேர் நிலச்சரிவுகளாலும், நால்வர் கட்டட இடிபாடுகளாலும், மேலும் நால்வர் மருத்துவமனையிலும் உயிரிழந்திருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வனுவாடூ தீவில் மீட்புப் பணியில் ஈடுபட அண்டை தீவான ஆஸ்திரேலியாவிலிருந்து வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் பேரிடர்கால உதவிக்குழுவில்(டிஏஆர்டி - டார்ட் ) இருந்து முதல்கட்டமாக ஒரு மீட்புக்குழு இன்று(டிச. 18) ஆஸ்திரேலிய விமானப் படை விமானம் மூலம் வனுவாடூ தீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த மீட்புக்குழுவில் தீயணைப்பு வீரர்கள், பொறியாளர்கள், மருத்துவர்களுடன் மீட்புப்பணியில் உதவிபுரியும் மோப்பநாய்களும் அனுப்பப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் டார்ட் மீட்ப்புப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?

ஜெயிலர் - 2: ஷாருக்கானுக்குப் பதிலாக பவன் கல்யாண்?

அரசனில் இணைந்த கென்!

அல்லு அர்ஜுனின் 25-வது படத்தை இயக்கும் பாசில் ஜோசஃப்?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


