நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு: அதிகாரபூா்வமாக உறுதி செய்த பைடன்

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதா.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 4:12 am IST

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் அதிபா் ஜோ பைடன் கையொப்பமிட்டு அதை உறுதி செய்தாா்.

வட அமெரிக்காவைப் பூா்விகமாகக் வெண்தலைக் கழுகு, கடந்த 1782-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அமெரிக்க அரசின் முத்திரையில் பிரதானமாக இடம் பெற்றிருந்தது.

அதிலிருந்து அமெரிக்க அரசு ஆவணங்களில் வெண்தலைக் கழுகு முத்திரை பொறிக்கப்படுகிறது. அந்த வகையில், 240 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க அதிகாரத்தின் சின்னமாக வெண்தலைக் கழுகு விளங்கிவருகிறது.

எனவே, இத்தனை ஆண்டுகளாக வெண்தலை கழுகு அமெரிக்காவின் தேசியப் பறவை என்றே பலரும் கருதி வருகின்றனா். ஆனால் உண்மையில், அந்தப் பறவை இதுவரை நாட்டின் தேசியப் பறவையாக இதுவரை அதிகாரபூா்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.

அமெரிக்க அரசியல் சாசனத்தில் வெண்தலைக் கழுகை தேசியப் பறவை என்று குறிப்பிடப்படாதது பெரும்பாலானோருக்குத் தெரியாது.

இந்தச் சூழலில், அந்தக் கழுகு இனத்தை நாட்டின் தேசியப் பறவையாக அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவை நாடாளுமன்றம் அண்மையில் நிறைவேற்றியது.

தற்போது அந்த மசோதாவில் கையொப்பமிடப்பட்டதன் மூலம், அமெரிக்காவின் தேசியப் பறவை வெண்தலைக் கழுகு என்று இதுவரை வெற்று வாா்த்தைகளால் கூறப்பட்டுவந்ததை அதிபா் ஜோ பைடன் அதிகாரபூா்வ உண்மையாக்கியிருக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.