தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கூகுள்: ஏஐ பயிற்சிக்காக ரூ.224 கோடி ஒதுக்கீடு!

ஐரோப்பாவில் ஏஐ திறன் மேம்பாடுக்காக கூகுள் நிதி ஒதுக்கியுள்ளது.

News image
கூகுள்
Updated On :12 பிப்ரவரி 2024, 9:02 am

DIN

செயற்கை நுண்ணறிவு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்காக 27 மில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.224 கோடி) அளிக்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏஐ வாய்ப்புகளை முன்னெடுக்கும் திட்டத்தின்கீழ் ஐரோப்பா முழுவதும் உள்ள பின்தங்கிய பணியாளர்களை திறன் ரீதியாக மேம்படுத்த 10 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, “ஐரோப்பா முழுவதும் உள்ள மக்கள் ஏஐ சார்ந்து அறிவு, திறன் மற்றும் நம்பிக்கை பெறுவதற்கு இந்த திட்டம் உதவும்” என கூகுள் உடன் இணைந்து பணியாற்றும் இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அட்ரியன் பிரவுன் தெரிவித்துள்ளார்.

இந்த முன்னெடுப்பு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கவில் புத்தாக்க நிறுவனங்களை வளர்க்கும் கூகுளின் பயிற்சி மைய திட்டங்களையும் உள்ளடக்கியது.

மேலும், ஏஐ சார்ந்த வாய்ப்புகளை உருவாக்கும் முன்னெடுப்பை 18 மொழிகளுக்கு விரிவுப்படுத்தவுள்ளது கூகுள்.

இந்த பயிற்சிகள் இலவசமாக கிடைக்கவுள்ளதாகவும் மக்கள் மற்றும் நிறுவனங்கள் ஏஐ குறித்த அறிமுகம் பெறவும் இயல்பு வாழ்க்கையில் அவற்றின் திறன் மற்றும் அறிவு பயன்படுத்துவதை மேம்படுத்தவும் கூகுள் திட்டமிட்டுள்ளது.