நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அமேசான் காட்டில் புதியவகைப் பாம்பு இனம் கண்டுபிடிப்பு!

அமேசான் மழைக்காடுகளில் புதியவகை பாம்பினத்தைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

News image

dotcom

Updated On :22 பிப்ரவரி 2024, 5:47 pm IST

அமேசான் மழைக்காடுகளில் புதிய வகை பச்சை அனகோன்டா பாம்பு இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த பாம்பு 26 அடி உயரமும், 200கிலோ எடையும் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதுவே உலகின் மிகப்பெரிய பாம்பு எனக் கூறப்படுகிறது.

விஞ்ஞானி மற்றும் பேராசிரியர் ஃரீக் வோன்க் அமேசான் காட்டிற்குள் உலகின் மிகப்பெரிய பாம்பைக் கண்டறிந்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட காணொலியில், அவர் தண்ணீருக்குள் நீந்தி, தண்ணீருக்குள்ளே இருக்கும் மிகப்பெரிய பாம்பினருகே செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அந்தக் காணொலியில் அவர், 'உலகின் மிகப்பெரிய பாம்பு இதுதான். கார் டயர் அளவுக்கு அகலமும், 200 கிலோ எடையும் கொண்டுள்ளது. அதன் தலை, என் தலை அளவுக்கு உள்ளது.' எனக் கூறியுள்ளார்.

மேலும், '7.5 மீட்டர் உயரமும், 500 கிலோ எடைகொண்ட பாம்புகள் கூட இங்கிருப்பதாக வௌராணி மக்கள் தெரிவிக்கின்றனர்' என மருத்துவர் பிரயன் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.