வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இஸ்ரேலில் 1500-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் அணிவகுப்பு!

போரை நிறுத்தி காஸாவில் உள்ள பிணைக்கைதிகளை விரைவில் மீட்க வலியுறுத்தும் வகையில், 1500க்கும் மேற்பட்ட பெண்கள் இஸ்ரேலில் அணிவகுத்தனர்.

News image
உயிரிழந்த உறவினர்களுக்காக கண்ணீர்விடும் காஸா மக்கள்
Updated On :19 ஜனவரி 2024, 4:21 pm

DIN

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 100 நாள்களைத் தாண்டி நடந்துகொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலின் தெல் அவிவி பகுதியில் 1500க்கும் அதிகமான பெண்கள் தெருக்களில் அணிவகுத்தனர். 

இஸ்ரேல் அரசினை பிணைக் கைதிகளை உடனடியாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பினர். வலைதளங்களில் பரவிவரும் காணொலிகளில் பெண்கள் குறியீட்டுப் பலகைகளோடு அணிவகுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

"நேரம் தாழ்த்தாதே" "உலகமே விழித்துக்கொள்" என்பது போன்ற சொற்றொடர்கள் எழுதிய பலகைகளை கையில் ஏந்தி அணிவகுத்துச் சென்றனர். பெண்கள் உரிமைகள் அமைப்பு துவங்கிய இந்த அணிவகுப்பில் பல ஆண்களும் கலந்துகொண்டுள்ளனர். 

அக்டோபர் 7 ஹமாஸால் பிடித்துச் செல்லப்பட்ட 253 பிணைக் கைதிகளில் 132 பேர் காஸாவில் இன்னும் இருப்பதாக தெரிவிக்கும் இஸ்ரேல் அரசு, 107 பேர் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கிறது. 

இஸ்ரேலின் போர் விவகாரத்துறை அமைச்சரான காடி எய்சென்காட், ஹமாஸ் அமைப்பினருடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி கைதிகளை காப்பாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.