யேமனில் உள்ள ஹவுதி நிலைகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் ஆறாவது சுற்றுத் தாக்குதலை வெள்ளிக்கிழமை மேற்கொண்டுள்ளனர்.
ஈரானிய ஆதரவு கிளர்ச்சி அமைப்பான ஹவுதிக்கள், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போரை நிறுத்தவே செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளைச் செலுத்தும் ஹவுதிகளின் நிலைகளை அமெரிக்க ராணுவம் தாக்கியுள்ளது.
ஹவுதிகளின் செய்தி நிறுவனமான அல்-மஸீரா, வடக்கு துறைமுக நகரமான ஹோடீடாவில் அமெரிக்க போர் விமானங்கள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

கட்டட இடிபாடுகளிடையே பாலஸ்தீன சிறுவர்கள் | AP
முன்னர், சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதலை ஹவுதிகள் நிறுத்துவதற்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
காஸாவில் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நான்கு மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. அபாயகரமான பேரழிவை ஏற்படுத்தும் இந்தத் தாக்குதல் சமீபத்திய வரலாற்றில் எங்கும் நடக்காதது. மத்திய கிழக்கு பிராந்தியங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: போரில் பெண்கள் ஏன் பலியாகவேண்டும்? : ஐநா
காஸாவில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. காஸாவில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பசியால் வாடுவதாக ஐநா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


