விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிகர மங்கை: உலகின் 7 சிகரங்களில் இன்னும் 3 மிச்சம்

சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த மணிதா பிரதான் 4 உயரிய சிகரங்களை ஏறி சாதனை படைத்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:36 pm

DIN

சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான மணிதா பிரதான், தென் அமெரிக்க கண்டத்தின் உயரிய சிகரமான அகோன்காகுவாவில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

ஆர்ஜெண்டினாவில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் அமைந்திருக்கும் இந்த சிகரத்தின் உச்சியை திங்கள்கிழமை அவர் அடைந்தார்.

இந்த சிகரத்தின் உயரம் 6,962 மீட்டர். மணிதாவின் இலக்கான ஏழு சிகரங்கள் வரிசையில் இது நான்காவது சிகரம்.

ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மிக உயரிய சிகரங்களை ஏறுவது அவரது திட்டம். இதற்கு முன்னர் 2021-ல் எவரெஸ்ட் சிகரம், 2022-ல்  எல்பிரஸ் சிகரம், அதே ஆண்டில் கிளிமஞ்சரோ சிகரம் ஆகியவற்றில் ஏறி சாதனை படைத்தார்.

பிரதான் சிக்கிம் முதல்வருக்கு மற்றும் சோரெங் பகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆதித்யா கோலே தமாங் ஆகியோரின் ஆதரவு மற்றும் ஊக்கத்துக்கு நன்றி தெரிவித்தார். 

ஆதித்யா கோலே தமாங் தனது பேஸ்புக்கில் மணிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில்,  “வாழ்த்துகள் மணிதா பிரதன். எங்களையும் உலகத்தையும் நீங்கள் வியப்பில் ஆழ்த்த தவறுவதே இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.