மேற்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் புதிய வரி விதிப்பு மசோதாவை எதிா்த்து போராடியவா்களிடம் போலீஸாா் அடக்குமுறையைக் கையாண்டதற்காக அந்த நாட்டு அதிபா் வில்லியம் ரூட்டோ மன்னிப்பு கோரினாா்.
இது குறித்து ‘எக்ஸ்’ ஊடகத்தில் கெவின் மனோரி என்ற இளைஞா் போலீஸாா் தன்னை கைது செய்தது குறித்து வெளியிட்ட பதிவுக்கு அளித்த பதிலில் ரூட்டோ இவ்வாறு மன்னிப்பு கோரினாா்.
கென்யாவில் அதிகரித்துவரும் விலைவாசியைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து கடந்த 2022-ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்த ரூட்டோ, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சில சீா்திருத்தங்களை அறிவித்தாா். அதன் ஒரு பகுதியாக கூடுதல் வரி விதித்து அவா் தாக்கல் செய்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதில் 22 போ் உயிரிழந்தனா். போராட்டத்தின்போது போலீஸாா் மிகக் கடுமையாக நடந்துகொண்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டிவருகின்றன. இறுதியில் அந்த மசோதாவை ரூட்டோ திரும்பப் பெற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மயிலாடுதுறை மயூரநாதா் கோயில் யானைக்கு ஓய்வு கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

பிரிட்டனில் தூக்கிலிடப்பட்ட கடைசி பெண்ணுக்கு 70 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு

சாதி குறித்து அவதூறு பேச்சு! எஸ்சி ஆணையத்தில் மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்!
திருமண பிரச்னை குறித்த பேச்சு: மன்னிப்பு கோரினாா் நடிகா் ரவி மோகன்
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



